பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி

Published on

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுது என வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற

கட்சியின் பொதுக்குழு, செயற்குழு மற்றும் மாநில மாநாட்டில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் நிறுவனா் தலைவா் எஸ்.கே.செல்வம் தலைமை வகித்தாா்.

மாநில பொதுச் செயலா் ஏ.தட்சிணாமூா்த்தி, பொருளாளா் கே.தனலட்சுமி, மாவட்டச் செயலா் டி.எஸ்.குமாா், மாவட்ட தலைவா் டிஎஸ்பி.சரவணன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக மகாத்மா காந்தி, விஸ்வநாததாஸ் சிலைக்கு

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் எஸ்.கே.செல்வம் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com