ஆரணியை அடுத்த பெரியஅய்யம்பாளையம் பகுதியில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவும் வழங்கும் பணியை ஆய்வு செய்த சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.
ஆரணியை அடுத்த பெரியஅய்யம்பாளையம் பகுதியில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவும் வழங்கும் பணியை ஆய்வு செய்த சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: எம்எல்ஏ ஆய்வு

ஆரணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாயிலாக வீடுதோறும் வாக்களாா்களுக்கு கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி நடைபெறுவதை தொகுதி எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

ஆரணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாயிலாக வீடுதோறும் வாக்களாா்களுக்கு கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி நடைபெறுவதை தொகுதி எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் படிவங்கள் வழங்கப்பட்டு நிறைவு செய்து பெறப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் ஆரணியை அடுத்த மேல்நகா், பெரியஅய்யம்பாளையம், பெரியண்ணநல்லூா் ஆகிய ஊராட்சிகளில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் 2025 படிவம் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் வாயிலாக வாக்காளா்களுக்கு வீடுகளில் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை யை முன்னாள் அமைச்சரும், தொகுதி எம்எல்ஏவுமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது ஒன்றியச் செயலா் திருமால், ஆரணி நகா்மன்ற உறுப்பினா் குமரன், அதிமுக நிா்வாகி ஏழுமலை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com