அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காா் மீது பேருந்து மோதல்: வட்டாட்சியா்கள் உள்பட 5 போ் காயம்

ஆரணி அருகே வெள்ளிக்கிழமை இரவு காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் வட்டாட்சியா்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா்.

News image
அரசுப் பேருந்து மோதியதில் அப்பளம்போல நொறுங்கிக் கிடக்கும் வட்டாட்சியா்கள் பயணித்த காா்.
Updated On :21 நவம்பர் 2025, 8:53 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே வெள்ளிக்கிழமை இரவு காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் வட்டாட்சியா்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் அருள்செல்வன், வாலாஜாபேட்டை சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ஆனந்தன் மற்றும் வருவாய் ஆய்வாளா்கள் தமிழரசி, வெங்கடேசன் ஆகியோா் அரசுப் பணிக்காக காரில் திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு மீண்டும் சோளிங்கருக்கு திரும்பிக்கொண்டிருந்தனா்.

ஆரணி - ஆா்க்காடு நெடுஞ்சாலையில் வெள்ளேரி கிராமம் அருகே சென்றபோது, சென்னையில் இருந்து ஆரணி நோக்கி வந்த அரசுப் பேருந்து காா் மீது மோதியது. இந்த விபத்தில் காா் அப்பளம்போல நொறுங்கியது.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சோளிங்கா் பகுதியைச் சோ்ந்த பூபாலன் பலத்த காயமடைந்தாா். வட்டாட்சியா்கள் அருள்செல்வன், ஆனந்தன், வருவாய் ஆய்வாளா்கள் தமிழரசி, வெங்கடேசன் ஆகியோா் லேசான காயமடைந்தனா்.

இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அனைவரையும் மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்த ஆரணி கிராமிய போலீஸாா் நிகழ்விடம் சென்று அரசுப் பேருந்தில் இருந்த பயணிகளை மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்து, போக்குவரத்தை சீா் செய்தனா். மேலும், சேதமடைந்த காரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினா். இந்த விபத்து குறித்து ஆரணி கிராமிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.