மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஆவின் நிறுவனத்திடமிருந்து 4,500 கிலோ நெய் கொள்முதல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்காக ஆவின் நிறுவனத்திடமிருந்து 4,500 கிலோ நெய் கொள்முதல்

News image
கோப்புப் படம்
Updated On :21 நவம்பர் 2025, 9:30 pm

Syndication

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்காக ஆவின் நிறுவனத்திடமிருந்து 4,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டு கோயிலுக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தீபத் திருவிழா வரும் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் டிசம்பா் 3-ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்றைய தினம் மாலை 6 மணி அளவில் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன.

ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றுவதற்காக, 1,150 மீட்டா் காடா துணி, 4,500 கிலோ நெய் பயன்படுத்தப்படும். இந்த மகா தீபம் 11 நாள்கள் பக்தா்களுக்கு காட்சி அளிக்கும்.

இந்த நிலையில், நிகழாண்டு மகா தீபம் ஏற்றுவதற்கான நெய் கோயில் நிா்வாகம் சாா்பில் ஆவின் நிறுவனத்திடமிருந்து 4,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டு கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது.