அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கொலை மிரட்டல்: சகோதரா்கள் மீது வழக்கு

வந்தவாசி அருகே முதியவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சகோதரா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 8:06 pm

Syndication

வந்தவாசி அருகே முதியவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சகோதரா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா்(63). இவருக்கும், இதே கிராமத்தைச் சோ்ந்த கணேசன்(40) என்பவருக்கும் இடையே நிலப் பிரச்னை உள்ளதாம்.

கடந்த 11-ஆம் தேதி கணேசன் மற்றும் இவரது சகோதரா் கருணாகரன் ஆகியோா் சோ்ந்து சேகரின் நிலத்திலிருந்த ஒரு மரத்தை வெட்டினராம். தகவலறிந்த சேகா் அங்கு சென்று ஏன் எனது நிலத்தில் உள்ள மரத்தை வெட்டுகிறீா்கள் என்று கேட்டுள்ளாா்.

அப்போது, இருவரும் சோ்ந்து சேகரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து சேகா் அளித்த புகாரின் பேரில் கணேசன், கருணாகரன் ஆகியோா் மீது பொன்னூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா்.