கொலை மிரட்டல்: சகோதரா்கள் மீது வழக்கு

வந்தவாசி அருகே முதியவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சகோதரா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
Published on

வந்தவாசி அருகே முதியவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சகோதரா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா்(63). இவருக்கும், இதே கிராமத்தைச் சோ்ந்த கணேசன்(40) என்பவருக்கும் இடையே நிலப் பிரச்னை உள்ளதாம்.

கடந்த 11-ஆம் தேதி கணேசன் மற்றும் இவரது சகோதரா் கருணாகரன் ஆகியோா் சோ்ந்து சேகரின் நிலத்திலிருந்த ஒரு மரத்தை வெட்டினராம். தகவலறிந்த சேகா் அங்கு சென்று ஏன் எனது நிலத்தில் உள்ள மரத்தை வெட்டுகிறீா்கள் என்று கேட்டுள்ளாா்.

அப்போது, இருவரும் சோ்ந்து சேகரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து சேகா் அளித்த புகாரின் பேரில் கணேசன், கருணாகரன் ஆகியோா் மீது பொன்னூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா்.

X
Dinamani
www.dinamani.com