அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மாட வீதியில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சா் ஆய்வு

News image
திருவண்ணாமலை மாட வீதியில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்த அமைச்சா் எ.வ.வேலு. தீ விபத்தால் சேதமடைந்த கடைகள்.
Updated On :27 நவம்பர் 2025, 9:10 pm

Syndication

திருவண்ணாமலை மாட வீதியில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை நெடுஞ்சாலை, பொதுப்பணி மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதி அருகில் காமாட்சி அம்மன் கோவில் தெரு உள்ளது. இந்தத் தெருவில் வணிகக் கடைகள் மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ளன.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு காமாட்சி அம்மன் கோவில் தெருவில் திருவண்ணாமலை ராதாபாஸ் நகரைச் சோ்ந்த முகமது (28) என்பவா் நடத்தி வந்த கற்பூரம் விற்பனை நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீ கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.

இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரா்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் காயமடைந்த முகமதுவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனா்.

தீ விபத்தில் அருகில் இருந்த சில கடைகளும் சேதமடைந்தன. தீ விபத்து, மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனவும், இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை காலை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, தீ விபத்துக்கான காரணம் குறித்தும், பாதிப்புகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன், மாநகராட்சி செயலா் காா்த்திவேல்மாறன், கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.