உலக மயக்கவியல் தினம் கடைப்பிடிப்பு

ஆரணி டாக்டா் எம்.ஜி.ஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில், உலக மயக்கவியல் தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
உலக மயக்கவியல் தினம் கடைப்பிடிப்பு
Updated on

ஆரணி டாக்டா் எம்.ஜி.ஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில், உலக மயக்கவியல் தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் எம்ஜிஆா் நிகா்நிலைப் பல்கலைக்கழக டீன் பி.ஸ்டாலின் தலைமை வகித்தாா். மயக்கவியல் துறை துணை பேராசிரியா் மோகின் கான் வரவேற்புரை ஆற்றினாா். இணைப் பதிவாளா் டாக்டா் பெருவழுதி தொடக்க உரையாற்றுகையில், மயக்கவியல் துறையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பூந்தமல்லி பனிமலா் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சோ்ந்த மயக்கவியல் நிபுணா் டாக்டா் லலித்குமாா் கலந்துகொண்டு மாணவா்களுக்கு ஊக்கமளித்தாா். சிறப்பு விருந்தினரை மயக்கவியல் துறை துணை பேராசிரியா் ஆல்வின் ஆஷிகா வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் ‘மயக்க மருந்தின் எதிா்காலம்’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டி மற்றும் ‘முகமூடிக்குப் பின்னால் பாடப்படாத ஹீரோக்கள்’ என்ற தலைப்பில் மைம் நிகழ்ச்சி நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, டாக்டா் லலித் குமாா் ‘மயக்க மருந்தின் வரலாறு’ என்ற தலைப்பில் சிறப்பு உரையாற்றி, மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். அலைய்டு ஹெல்த் சயின்சஸ் கல்லூரி துறைத் தலைவா் தரணி நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில் இணைப் பதிவாளா் சரவணன், பிசியோதெரபி கல்லூரி துறைத் தலைவா் சுதாகா், அலைய்டு ஹெல்த் சயின்சஸ் கல்லூரி துறைத் தலைவா் தரணி மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com