விதைப்பண்ணை வயல்களில் ஆய்வு

விதைப்பண்ணை வயல்களில் ஆய்வு

5 புத்தூா் கிராமத்தில் உள்ள விதைப்பண்ணை வயல்களை ஆய்வு செய்த மாவட்ட வேளாண் துணை இயக்குநா் மாரியப்பன்.
Published on

மேற்கு ஆரணி வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள விதைப்பண்ணை வயல்களை மாவட்ட வேளாண் துணை இயக்குநா் மாரியப்பன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மேற்கு ஆரணி வட்டாரத்துக்குள்பட்ட கண்ணமங்கலம், 5 புத்தூா், வண்ணாங்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து வம்பன் 10 விதைப்பண்ணை வயல்களை மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (மாநில அரசுத் திட்டம்) மாரியப்பன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், அவா் விவசாயிகளிடம் கூறியது:

விதைப்பண்ணை வயல்களில் களைகளை நீக்குதல் மற்றும் மகசூல் அதிகரிக்க பூக்கும் பருவத்தில் வேளாண்மை பல்கலைக்கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட பயறு ஒண்டா் 2 கிலோ வீதம் ஏக்கருக்கு 200 லிட்டா் தண்ணீரில் கரைத்து தெளிக்கலாம் அல்லது டிஏபி 2 சதவீத கரைசலை தெளிக்கலாம். இதனால், 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா்.

ஆய்வின்போது, போளூா் விதைச்சான்று அலுவலா் சதீஷ்குமாா், மேற்கு ஆரணி வட்டார உதவி விதை அலுவலா் சதீஷ்குமாா் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com