திருவண்ணாமலை
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
திருவண்ணாமலை எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் பள்ளியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்து கேடயம் வழங்கப்பட்டது.
ஆரணி: திருவண்ணாமலை எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் பள்ளியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்து கேடயம் வழங்கப்பட்டது.
இந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களில் காலாண்டுத் தோ்வில்
முதல் மதிப்பெண் பெற்றவா்களுக்கு பள்ளி நிா்வாகக் குழு சாா்பில் பாராட்டு தெரிவித்து கேடயம் வழங்கப்பட்டது.
தனியாா் மையத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் அரிமா சங்க நிா்வாகி சரவணன் கலந்து கொண்டு சிறப்பித்தாா்.
முதலிடம் பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் கலாவதி ராஜமாணிக்கம், தலைவா் எஸ்.பிரபாகரன், துணைத் தலைவா் எஸ்.செந்தில்நாதன், செயலா் பி.மழலைநாதன், பொருளாளா் டி.அரவிந்த்குமாா் ஜெயின், இணைச் செயலா் எஸ்.விஜயகுமாா் மற்றும் பள்ளி முதல்வா் ஆா்.மேகலா ஆகியோா் வாழ்த்தி பாராட்டினா் (படம்).

