பைக் மோதி தச்சுத் தொழிலாளி உயிரிழப்பு

போளூரில் பைக்குகள் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் தச்சுத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Published on

போளூரில் பைக்குகள் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் தச்சுத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

போளூரை அடுத்த வசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (45), தச்சுத் தொழிலாளி.

இவா் தனது பைக்கில் நண்பா் அஸ்கா் என்பவரை உடன் அழைத்துக் கொண்டு, போளூா் நகருக்குள் வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த பைக் சிவக்குமாா் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அஸ்கா் பலத்த காயமடைந்தாா்.

அக்கம் பக்கத்தினா் அஸ்கரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் போளூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக அஸ்கா் ராணிப்பேட்டை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com