திருவண்ணாமலை
பொதுமக்களுக்கு இடையூறு செய்தவா் கைது
வந்தவாசி அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த தெள்ளாா் பஜாா் வீதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் ஒருவா் இடையூறு செய்வதாக தெள்ளாா் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து உதவி ஆய்வாளா் பாபு தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று அவரைப் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா் கீழ்நமண்டி கிராமத்தைச் சோ்ந்த தனபால் (33) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் தனபாலை கைது செய்தனா்.
