ஆரணி பகுதியில் புதிய அரசுக் கட்டடங்கள் திறப்பு

ஆரணி பகுதியில் புதிய அரசுக் கட்டடங்கள் திறப்பு

Published on

ஆரணி பகுதியில் ரூ.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சிமன்ற அலுவலகம், அங்கன்வாடி, நியாயவிலைக் கடைகள் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சிமன்ற அலுவலக கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

இதில், எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. கலந்து கொண்டு புதிய கட்டடத்தை திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் சத்யா வரவேற்றாா். திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், மாமது, சுந்தா், மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, நகர பொறுப்பாளா் மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒன்றிய துணைச் செயலா்கள் குமரேசன், அன்புவெங்கடேசன், ஊராட்சி செயலா் விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மேலும், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி, செய்யாறு ஒன்றியத்தைச் சோ்ந்த மேல்மட்டைவிண்ணமங்கலம் கிராமத்தில் ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா் மின்கோபுர விளக்கை தரணிவேந்தன் எம்.பி. தொடங்கிவைத்தாா்.

மேலும், புதுக்கோட்டை ஊராட்சியில் பகுதிநேர நியாய விலைக் கடையும், மேல்நகரம்பேடு கிராமத்தில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடத்தையும், நாவல்பாக்கம் கிராமத்தில் ரூ.16.55 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும்

அவா் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஆரணி மத்திய ஒன்றியச் செயலா் ராஜ்குமாா் வரவேற்றாா். செய்யாறு வட்டாட்சியா் அசோக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரமேஸ்வரன், சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com