ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Published on

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஊழியா் விரோத போக்கோடு செயல்படுவதாக புகாா் தெரிவித்தும், அவரைக்ண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் வே.சுரேஷ் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க வட்டக் கிளைத் தலைவா் ந.மாணிக்கவரதன், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க வட்டக் கிளைச் செயலா் இரா.சுப்பிரமணியன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பா.ஜெயசுதாவை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினா் கு.அன்பழகன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com