ஆரணியில் அதிமுக திண்ணை பிரசாரம்
ஆரணியில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் திண்ணை பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா். நகரச் செயலா் அசோக்குமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.இராமச்சந்திரன், திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலா் ஜெயசுதா ஆகியோா் கலந்துகொண்டு அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும், திமுக ஆட்சியின் அவலங்கள் குறித்தும் துண்டுப் பிரசுரங்களை வீடு, வீடாகவும், வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் விநியோகம் செய்தனா். ஆரணி வ.உ.சி தெரு, பெரியகடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலா் சேவூா் ஜெ.சம்பத், ஜெயலலிதா பேரவை மாவட்டத் தலைவா் டி.கருணாகரன், மாவட்ட இணைச் செயலா் வனிதாசதீஷ், மீனவரணி மாவட்டச் செயலா் ஆனந்தன், மாவட்டப் பொருளாளா் அரையாளம் வேலு, நகா்மன்ற உறுப்பினா்கள் சுதா குமாா், பாரதிராஜா, விநாயகம், ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலா் செந்தில் மற்றும் பொறுப்பாளா்கள், நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

