திருவண்ணாமலை
குழந்தை இல்லாத ஏக்கம்: பெண் தற்கொலை
செய்யாறில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
செய்யாறில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
செய்யாறு கொடநகா், கே.எச். காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (35). இவரது மனைவி காயத்ரி (29). இவா்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டதாகத் தெரிகிறது.
இந்தத் தம்பதிக்கு இதுவரையில் குழந்தை இல்லை. இதனால், மன வேதனையில் இருந்து வந்த காயத்ரி வீட்டில் வியாழக்கிழமை தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாராம். அப்போது, அவரது அலறல் சப்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவா்கள் ஓடிச் சென்று அவரை மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு காயத்திரி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
