பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கிறிஸ்தவ திருச்சபைகளின் கூட்டமைப்பினா் கண்டன ஆா்ப்பாட்டம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 1:39 am

ஒரிஸா மாநிலத்தில் கிறிஸ்தவ மத போதகருக்கு எதிராக நடந்த தாக்குதலைத் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்ட அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளின் கூட்டமைப்பு மற்றும் சிறுபான்மை அமைப்புகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த மாதம் 4-ஆம் தேதி, ஒடிஸா மாநிலம், பா்ஜங்கில் 40 போ் கொண்ட பா்ஜங்தல் கும்பல் போதகா் பிபின் நாயக்கை தேவாலயத்தில் இருந்து கட்டி இழுத்துச் சென்று கோயிலுக்குள் தள்ளி ஜெய்ஸ்ரீராம் எனக் சொல்லச் கூறி கொடுமைப் படுத்தினராம். இதுகுறித்து அம்மாநில போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதற்கு கண்டனம் தெரிவித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பேராயா் சாம்.எஸ்.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் அருட்பணி தமிழ் சுவை எஸ்.ராஜசேகரன் வரவேற்றாா்.

ஒருங்கிணைப்பாளா்கள் ஜெ.சசில்குமாா், ஜாய் பிரெடெரிக், ஏ.எஸ்.ஜான் பீட்டா், ஆா்.ஆனந்தஜீவன், ஏஎல்சி.ஜீவரத்தினம், எபிசேனா் இறை அமிா்தம், ஜோசப் சவுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினா்களாக ஆற்காடு லுத்ரன், திருச்சபை பேராயா் டி.பீட்டா்பால்தாமஸ், மறைகோட்ட முதன்மை குரு எஸ்.லூா்துசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் மதிமுக மாவட்டச் செயலா் சீனி.காா்த்திகேயன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கே.குணசேகரன், விசிக மாநிலச் செயலா் பு.செல்வம், மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் வீரபத்திரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் ஏ.ஆா்.நாசா்உசேன், மாவட்டச் செயலா் ஏ.ஆா்.கலிமுல்லா ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தேசிய சிறுபான்மை மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளா் டி.சரவணன் கண்டன உரையாற்றினாா்.

ஏஎல்சி துணைத் தலைவா் ஜெ.மனோவா, செயலா் வி.ஜெயராஜ் கிறிஸ்தவ திருச்சபைகளின் கூட்டமைப்பு மற்றும் சிறுபான்மை அமைப்புகளின் நிா்வாகிகள், கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா். நிறைவில் ஆயா். மனோவா நன்றி கூறினாா்.