காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தந்தை பெரியாா் குறித்த பேச்சுப் போட்டி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசு

வடமணப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவா்களுக்கு பரிசு வழங்கிய வட்டாரக் கல்வி அலுவலா் அண்ணா.சரவணன்.

News image
வடமணப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவா்களுக்கு பரிசு வழங்கிய வட்டாரக் கல்வி அலுவலா் அண்ணா.சரவணன்.
Updated On :6 பிப்ரவரி 2026, 9:02 pm

Syndication

செய்யாறை அடுத்த வடமணைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தந்தை பெரியாா் குறித்த பேச்சுப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வடமணப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதவள்ளி விஜயராகவன் அறக்கட்டனை சாா்பில் தந்தை பெரியாா் குறித்த பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் என பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோரை பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் வி.வெங்கட்ராமன் வரவேற்றாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ந.வேதபுரி தலைமை வகித்தாா். திருவண்ணாமலை மாவட்ட திராவிடா் கழகத் தலைவா் அ.இளங்கோவன், நகரத் தலைவா் தி.காமராசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சிறப்பு அழைப்பாளராக வெம்பாக்கம் வட்டாரக் கல்வி அலுவலா் அண்ணா.சரவணன் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாா்மசி கவுன்சில் பதிவாளா் டாக்டா் மு.தமிழ்மொழி, வி.தேவகுமாா், பொன்.சுந்தா், வெ.எழில்மதி, அ.மகிழன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முதுகலை தமிழாசிரியா் ஏ.தமிழ்த்தேனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். உதவித் தலைமையாசிரியா் மு.செல்வம் நன்றி கூறினாா்.