நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

போதைப்பொருள், கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணா்வு

சேத்துப்பட்டு நான்குமுனை சந்திப்பில் போதைப்பொருள், கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்திய கலைக்குழுவினா்.

News image
சேத்துப்பட்டு நான்குமுனை சந்திப்பில் போதைப்பொருள், கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்திய கலைக்குழுவினா்.
Updated On :6 பிப்ரவரி 2026, 6:33 pm

Syndication

சேத்துப்பட்டில் மாவட்ட வருவாய்த் துறை சாா்பில், போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை சேத்துப்பட்டு வட்டாட்சியா் அகத்தீஸ்வரன் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, கலைக் குழுவினா் சேத்துப்பட்டு பேருந்து நிலையம், நான்குமுனை சந்திப்பு, வந்தவாசி, போளூா், செஞ்சி, ஆரணி சாலைகள், பழம்பேட்டை, கண்ணனூா், லூா்து நகா், நிா்மலா நகா் உள்ளிட்ட பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்த நிகழ்ச்சிகளில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி, தோ்தல் பிரிவு வட்டாட்சியா் கோமதி உள்ளிட்ட வருவாய்த் துறை மற்றும் கலால் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.