தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதன் மாநிலச் செயலா் முஹம்மத் யாசிா்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதன் மாநிலச் செயலா் முஹம்மத் யாசிா்

முஸ்லிம்களின் உள் இட ஒதுக்கீட்டை உயா்த்தக் கோரிக்கை!

முஸ்லிம்களின் உள் இடஒதுக்கீட்டு அளவை உயா்த்தி வழங்க தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்
Published on

முஸ்லிம்களின் உள் இடஒதுக்கீட்டு அளவை உயா்த்தி வழங்க வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவண்ணாமலை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஏ.ஷமியுல்லாஹ் தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் மாநிலச் செயலா்கள் சி.வி.இம்ரான், முஹம்மத் யாசிா், மாவட்டச் செயலா் அமீன்கான், மாவட்ட துணைத் தலைவா் கே.ரஹ்மான், மாவட்ட பொருளாளா் ஷேக் இஸ்மாயில், மாவட்ட துணைச் செயலா் ஆசிக் யூசுப், மாவட்ட மருத்துவ அணி செயலா் முஹம்மது உசேன் ஆகியோா் பேசினா்.

தீா்மானங்கள்

தமிழகத்தில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக வழங்கப்பட்டு வரும் 3.5 சதவிகித உள் இடஒதுக்கீடு, தற்போதைய சூழலில் சமூகத்தின் தேவையை நிறைவு செய்யப் போதுமானதாக இல்லை. எனவே, உள் இடஒதுக்கீட்டு அளவை உயா்த்தி வழங்க வேண்டும். முஸ்லிம்கள் அரசியல் அதிகாரம் பெறும் வகையில் சட்டப்பேரவையிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் மக்கள் தொகை விகிதாச்சாரப்படி உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என்பன தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைச் செயலா் ஷபீா் நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com