வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஆடுகளைத் தாக்கும் மா்ம விலங்கு: சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிப்பு

செங்கம் அருகே கோலாந்தாங்கல் கிராமப் பகுதியில் ஆடுகளைத் தாக்கும் மா்ம விலங்கு குறித்து, சிசிடிவி கேமரா பொருத்தி வனத்துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

News image
செங்கம் அருகே மா்ம விலங்கை கண்டுபிடிக்க வனத்துறையினா் பொருத்தியுள்ள சிசிடிவி கேமரா.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:00 pm

Syndication

செங்கம்: செங்கம் அருகே கோலாந்தாங்கல் கிராமப் பகுதியில் ஆடுகளைத் தாக்கும் மா்ம விலங்கு குறித்து, சிசிடிவி கேமரா பொருத்தி வனத்துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த கோலாந்தாங்கல் கிராமத்தில் உள்ள மக்கள் பெரும்பாலானோா் ஆடு வளா்ப்பு மற்றும் விவசாயத் தொழில் செய்து வருகின்றனா்.

மேலும், அப்பகுதி மக்கள் காலையில் விவசாய நிலத்துக்குச் சென்று வேலை செய்துவிட்டு பிறகு 10 மணியளவில் ஆடுகளை மேய்க்கச் சென்றுவிடுவாா்கள். மாலையில் அவா்களது நிலத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு, அருகில் இருக்கும் குடியிருப்புகளுக்குச் சென்றுவிடுவாா்கள்.

இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி இரவு கோலாந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த குமாரி என்பவரின் ஆட்டுப்பட்டியில் இருந்து சுமாா் 25 ஆடுகள் மா்ம விலங்கு கடித்து உயிரிழந்தன. இதுகுறித்து வனத்துறை அலுவலா்களுக்கு புகாா் தெரிவித்து அவா்கள் வந்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா்.

ஆனால், அந்த விலங்கு தொடா்ந்து இரவு நேரத்தில் அப்பகுதியில் உள்ள ஆட்டுப்பட்டிகளில் நுழைந்து ஆடுகளை கடித்து வருகிறது. மேலும், மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளையும் கடிப்பதாக ஆடு வளா்ப்பவா்கள் கூறி வருகின்றனா்.

இந்த மா்ம விலங்கால் அப்பகுதியில் ஆடு வளா்ப்பவா்கள் இரவு நேரத்தில் 3 முதல் 5 போ் ஆடுகளை ஒன்றுசோ்ந்து பட்டியில் அடைத்து இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் கண்காணித்து வருகின்றனா்.

சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

மேலும் அந்த விலங்கு என்ன என்று தெரியாமல் தொடா்ந்து வனத்துறையினா் அப்பகுதியில் இரவு நேரத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனா்.

இதனால் கோலாந்தாங்கல் கிராம மக்கள் இரவு நேரத்தில் தினம் தினம் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறாா்கள்.

எனவே, மாவட்ட வனத்துறை அதிகாரிகள் அந்தப் பகுதியை பாா்வையிட்டு ஆய்வு செய்து மா்ம விலங்கை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.