மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பெருமாள் கோயிலில் ஹயக்ரீவ ஹோமம்

வந்தவாசியை அடுத்த கீழ்க்குவளைவேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஹயக்ரீவ ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் நடைபெற்ற ஹயக்ரீவ ஹோமத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:04 pm

Syndication

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த கீழ்க்குவளைவேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஹயக்ரீவ ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாணவா்கள் தோ்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று உயா்படிப்புக்கு செல்ல வேண்டியும், அறிவு, ஞாபகசக்தி மேம்பட வேண்டியும் இந்த ஹோமம் நடத்தப்பட்டது.

இதில் இந்த பகுதியைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து ஹயக்ரீவ ஹோமம் நடைபெற்றது. மாணவ, மாணவிகளுக்கு சுவாமி திருவடியில் சமா்ப்பிக்கப்பட்ட பேனா, பென்சில் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.