திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

லாடவரம் கிராமத்தில் கலையரங்கம் அமைக்க பூமி பூஜை

ஆரணி அருகேயுள்ள லாடவரம் கிராமத்தில் புதிதாக கலையரங்கம் அமைக்க திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

News image

லாடவரம் கிராமத்தில் கலையரங்கம் அமைப்பதற்கான பணியை பூமி பூஜை செய்து தொடங்கிவைத்த சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.

Updated On :9 பிப்ரவரி 2026, 8:49 pm

ஆரணி: ஆரணி அருகேயுள்ள லாடவரம் கிராமத்தில் புதிதாக கலையரங்கம் அமைக்க திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

ஆரணியை அடுத்த லாடவரம் ஊராட்சியில் கலையரங்கம் அமைத்துத் தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன் அடிப்படையில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கலையரங்கம் அமைப்பதற்காக பூமி பூஜை விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயபிரகாசம், நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்டப் பிரதிநிதி தீனதயாளன், கிளைச் செயலா்கள் ஜி.போஸ், எல்லைக்காரன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை நிா்வாகி பூபாலன், ஏ.நரசிம்மன் உள்பட நிா்வாகிகள், கிராம பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.