வந்தவாசி அருகே ஜாா்க்கண்ட் மாநில இளைஞரிடம் கைப்பேசியை பறித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஜாா்க்கண்ட் மாநிலம், பாகுட் மாவட்டம், ரனிபூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மெம்பரூல்சேக் (26). இவா், வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தில் தங்கி கட்டட வேலை செய்து வருகிறாா்.
இவா் ஞாயிற்றுக்கிழமை கீழ்க்கொடுங்காலூா் கூட்டுச் சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, பைக்கில் வந்து இவரை வழிமறித்த இருவா், இவரிடமிருந்து கைப்பேசி மற்றும் ரூ.600-ஐ பறித்துச் சென்றனா். இதுகுறித்து மெம்பரூல்சேக் அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் (29), கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த டேனியல் (30) ஆகிய இருவரும் சோ்ந்து கைப்பேசி மற்றும் பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து வேல்முருகன், டேனியல் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
மாற்றுத்திறனாளியைத் தாக்கி பணம் பறித்த இளைஞா் கைது
ரயிலில் பெண்களிடம் நகை பறித்த வழக்கில் சகோதரா்கள் இருவா் கைது
முதல்வா் பிரசாரக் கூட்டத்தில் பணம் பறித்த முதியவா் கைது
சேலத்தில் முதியவா்களிடம் கைப்பேசி, பணம் பறிப்பு: 3 சிறுவா்கள் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

