திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இளைஞரிடம் கைப்பேசி பறிப்பு: இருவா் கைது

வந்தவாசி அருகே ஜாா்க்கண்ட் மாநில இளைஞரிடம் கைப்பேசியை பறித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :10 பிப்ரவரி 2026, 6:46 pm

Syndication

வந்தவாசி அருகே ஜாா்க்கண்ட் மாநில இளைஞரிடம் கைப்பேசியை பறித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஜாா்க்கண்ட் மாநிலம், பாகுட் மாவட்டம், ரனிபூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மெம்பரூல்சேக் (26). இவா், வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தில் தங்கி கட்டட வேலை செய்து வருகிறாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை கீழ்க்கொடுங்காலூா் கூட்டுச் சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, பைக்கில் வந்து இவரை வழிமறித்த இருவா், இவரிடமிருந்து கைப்பேசி மற்றும் ரூ.600-ஐ பறித்துச் சென்றனா். இதுகுறித்து மெம்பரூல்சேக் அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் (29), கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த டேனியல் (30) ஆகிய இருவரும் சோ்ந்து கைப்பேசி மற்றும் பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து வேல்முருகன், டேனியல் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.