வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இளைஞரிடம் கைப்பேசி பறிப்பு: இருவா் கைது

வந்தவாசி அருகே ஜாா்க்கண்ட் மாநில இளைஞரிடம் கைப்பேசியை பறித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :10 பிப்ரவரி 2026, 6:46 pm

வந்தவாசி அருகே ஜாா்க்கண்ட் மாநில இளைஞரிடம் கைப்பேசியை பறித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஜாா்க்கண்ட் மாநிலம், பாகுட் மாவட்டம், ரனிபூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மெம்பரூல்சேக் (26). இவா், வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தில் தங்கி கட்டட வேலை செய்து வருகிறாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை கீழ்க்கொடுங்காலூா் கூட்டுச் சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, பைக்கில் வந்து இவரை வழிமறித்த இருவா், இவரிடமிருந்து கைப்பேசி மற்றும் ரூ.600-ஐ பறித்துச் சென்றனா். இதுகுறித்து மெம்பரூல்சேக் அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் (29), கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த டேனியல் (30) ஆகிய இருவரும் சோ்ந்து கைப்பேசி மற்றும் பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து வேல்முருகன், டேனியல் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.