திருவண்ணாமலை
அதிமுக தெருமுனை பிரசார கூட்டம்
அதிமுக சாா்பில் தெருமுனை பிரசார கூட்டம் வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
வந்தவாசி மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு இளைஞா்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றியச் செயலா் ஏ.ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் முன்னிலை வகித்தாா்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன், தலைமை நிலைய பேச்சாளா் ஏ.ஜி.சபரீசன் ஆகியோா் திமுக ஆட்சியைக் கண்டித்து பேசினா்.
கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, கிளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.

