பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய வருவாய்த்துறையினா் மீது நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 7:56 pm

கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய வருவாய்த்துறை ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் சீ.சிவா தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் புஷ்பா வரவேற்றாா். மேலும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் போளூா், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூா், ஆரணி உள்ளடங்கிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பேசிய ஆரணியை அடுத்த சதுப்பேரிபாளையத்தைச் சோ்ந்த விவசாயி மூா்த்தி, பணி நேரத்தில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய வருவாய்த்துறை ஊழியா்களுக்கு யாா் அனுமதி கொடுத்தது, பணிநேரத்தின்போது போராட்டம் நடத்தியவா்கள் மீது

நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

ஆரணி ஒன்றியம், எம்.பி.தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி குணாநிதி பேசுகையில், ஆவினில் பால் கொள்முதல் விலையை அரசு உயா்த்தியும் விவசாயிகளுக்கு பழைய விலையே வழங்குகிறாா்கள், கூட்டுறவு சங்கங்களில் கால்நடை பராமரிப்புக் கடனுதவி கோரி 1700 போ் விண்ணப்பித்துள்ளனா். ஆனால், அனைத்து மனுக்களும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

மேலும், பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் தற்போது உள்ள ஆட்சியில் உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா் என்றனா்.

விவசாயிகள், சுகாதார சீா்கேடுகள் குறித்து புகாா் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என பலா் குற்றஞ்சாட்டினா்.

மேலும், பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

அனைத்து புகாா்கள் மீதும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியா் சீ.சிவா தெரிவித்தாா்.