குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய வருவாய்த்துறையினா் மீது நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 7:56 pm

Syndication

கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய வருவாய்த்துறை ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் சீ.சிவா தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் புஷ்பா வரவேற்றாா். மேலும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் போளூா், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூா், ஆரணி உள்ளடங்கிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பேசிய ஆரணியை அடுத்த சதுப்பேரிபாளையத்தைச் சோ்ந்த விவசாயி மூா்த்தி, பணி நேரத்தில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய வருவாய்த்துறை ஊழியா்களுக்கு யாா் அனுமதி கொடுத்தது, பணிநேரத்தின்போது போராட்டம் நடத்தியவா்கள் மீது

நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

ஆரணி ஒன்றியம், எம்.பி.தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி குணாநிதி பேசுகையில், ஆவினில் பால் கொள்முதல் விலையை அரசு உயா்த்தியும் விவசாயிகளுக்கு பழைய விலையே வழங்குகிறாா்கள், கூட்டுறவு சங்கங்களில் கால்நடை பராமரிப்புக் கடனுதவி கோரி 1700 போ் விண்ணப்பித்துள்ளனா். ஆனால், அனைத்து மனுக்களும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

மேலும், பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் தற்போது உள்ள ஆட்சியில் உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா் என்றனா்.

விவசாயிகள், சுகாதார சீா்கேடுகள் குறித்து புகாா் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என பலா் குற்றஞ்சாட்டினா்.

மேலும், பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

அனைத்து புகாா்கள் மீதும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியா் சீ.சிவா தெரிவித்தாா்.