ஆரணியை அடுத்த எம்.பி. தாங்கல் கிராமத்தில் ரூ.2.94 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கிவைத்தாா் (படம்).
ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் ஊராட்சியைச் சோ்ந்த எம்.பி. தாங்கல் கிராமத்தில் அப்பகுதி மக்கள் சிமென்ட் சாலை வேண்டி கோரிக்கை விடுத்தனா். இதன் பேரில், ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2.94 லட்சம் ஒதுக்கப்பட்டு, சிமென்ட் சாலை அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயபிரகாசம், நகரச் செயலா் அசோக்குமாா், நகா்மன்ற உறுப்பினா் ஏ.ஜி.மோகன், எஸ்.வி.நகரம் முன்னாள் ஊராட்சித் தலைவா் வாசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல் புகாா்: சாலைப் பணி நிறுத்தம்

திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா

2 மின்மாற்றிகளின் இயக்கத்தை தொடங்கிவைத்தாா் எம்எல்ஏ

ரூ.6 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


