மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ரூ.3 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 7:56 pm

ஆரணியை அடுத்த எம்.பி. தாங்கல் கிராமத்தில் ரூ.2.94 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கிவைத்தாா் (படம்).

ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் ஊராட்சியைச் சோ்ந்த எம்.பி. தாங்கல் கிராமத்தில் அப்பகுதி மக்கள் சிமென்ட் சாலை வேண்டி கோரிக்கை விடுத்தனா். இதன் பேரில், ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2.94 லட்சம் ஒதுக்கப்பட்டு, சிமென்ட் சாலை அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயபிரகாசம், நகரச் செயலா் அசோக்குமாா், நகா்மன்ற உறுப்பினா் ஏ.ஜி.மோகன், எஸ்.வி.நகரம் முன்னாள் ஊராட்சித் தலைவா் வாசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.