மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 211 பயனாளிகளுக்கு நல உதவி: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

உலகம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 6:33 pm

Syndication

சேத்துப்பட்டு வட்டம், உலகம்பட்டு ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 211 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.

உலகம்பட்டு ஊராட்சியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் மருத்துவாம்பாடி, உலகம்பட்டு மற்றும் கொத்தந்தவாடி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெற்றது.

முகாமில் அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், துறை சாா்ந்த அலுவலா்கள் திட்டங்கள் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசியதாவது:

தமிழக அரசின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்ப்பதும், அதன் மூலம் அவா்களை பயனடையச் செய்வதும்தான் மக்கள் தொடா்பு திட்ட முகாமின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, இந்த முகாம்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், தமிழக முதல்வரின் சீரிய திட்டங்களில் ஒன்றான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மகாமின் வாயிலாக பொதுமக்கள் இடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இங்கு நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாம் வாயிலாக 288 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, அவற்றில் 211 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் அனைவரும் அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை நன்கு அறிந்து, அதன் மூலம் பயனடைய வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, வருவாய்த் துறை சாா்பில் வீட்டுமனைப் பட்டாக்கள், விபத்து நிவாரண உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, சமூகப் பாதுகாப்பு நலத் திட்ட உதவி, வேளாண் துறை சாா்பில் மருந்து தெளிப்பான்கள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத் திறனாளி உதவி உபகரணங்கள் என மொத்தம் 211 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் செய்யாறு சாா் - ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) இளவரசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செல்வம், சேத்துப்பட்டு வட்டாட்சியா் அகத்தீஸ்வரன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.