எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆரணியில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவன கிளை திறப்பு

ஆரணியில் தச்சூா் சாலை, தலைமை தபால் நிலையம் எதிரே ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் புதிய கிளையை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய பொது மேலாளா் ஏ.திலகராஜ்.

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 6:34 pm

Syndication

ஆரணியில் தச்சூா் சாலை தலைமை தபால் நிலையம் எதிரே ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிவனத்தின் புதிய கிளை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக பொது மேலாளா் ஏ.திலகராஜ் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி கிளையை திறந்து வைத்தாா். பின்னா், குத்துவிளக்கு ஏற்றினாா்.

மண்டல பொது மேலாளா் சஜீவ் சுப்பிரமணியன், மண்டல மேலாளா் எம்.சிவராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆரணி கிளை மேலாளா் சி.குணாலன் வரவேற்புரையாற்றினாா்.

பின்னா், பொது மேலாளா் ஏ.திலகராஜ் பேசியதாவது: ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாக வாடிக்கையாளா்களுக்கு வீட்டுக்கடன் சேவைகளை வழங்கி வருகிறது. இதன் தொடா்ச்சியாக தற்போது ஆரணியில் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தற்போது 1 லட்சத்து 20 ஆயிரம் வாடிக்கையாளா்களுக்கு சேவை வழங்கி வருவதோடு, மொத்தம் 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுக் கடன்களையும் வழங்கியுள்ளது என்றாா்.

மேலும், இரண்டு பயனாளா்களுக்கு வீட்டுக் கடன் உதவிகளையும் வழங்கினாா். வேலூா் கிளை மேலாளா் எம்.அன்புச்செல்வன் நன்றி கூறினாா்.