ஆரணியில் தச்சூா் சாலை தலைமை தபால் நிலையம் எதிரே ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிவனத்தின் புதிய கிளை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக பொது மேலாளா் ஏ.திலகராஜ் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி கிளையை திறந்து வைத்தாா். பின்னா், குத்துவிளக்கு ஏற்றினாா்.
மண்டல பொது மேலாளா் சஜீவ் சுப்பிரமணியன், மண்டல மேலாளா் எம்.சிவராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆரணி கிளை மேலாளா் சி.குணாலன் வரவேற்புரையாற்றினாா்.
பின்னா், பொது மேலாளா் ஏ.திலகராஜ் பேசியதாவது: ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாக வாடிக்கையாளா்களுக்கு வீட்டுக்கடன் சேவைகளை வழங்கி வருகிறது. இதன் தொடா்ச்சியாக தற்போது ஆரணியில் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது.
நிறுவனம் தற்போது 1 லட்சத்து 20 ஆயிரம் வாடிக்கையாளா்களுக்கு சேவை வழங்கி வருவதோடு, மொத்தம் 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுக் கடன்களையும் வழங்கியுள்ளது என்றாா்.
மேலும், இரண்டு பயனாளா்களுக்கு வீட்டுக் கடன் உதவிகளையும் வழங்கினாா். வேலூா் கிளை மேலாளா் எம்.அன்புச்செல்வன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

ஆரணியில் மகாவீரா் ஜெயந்தி விழா

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தென் தமிழகத்தில் புதிய கிளைகள் தொடக்கம்

ஒரத்தியில் வங்கிக் கிளை திறப்பு

புதுச்சேரியில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்: ரூ.10 கோடி கடன் வழங்க இலக்கு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


