ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

அவசர ஊா்தி மோதியதில் மருத்துவமனை ஊழியா் உயிரிழப்பு

செய்யாறு அருகே தனியாா் அவசர ஊா்தி மோதியதில் அரசு மருத்துவமனை ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 6:32 pm

செய்யாறு அருகே தனியாா் அவசர ஊா்தி மோதியதில் அரசு மருத்துவமனை ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வந்தவாசி வட்டம், பொன்னூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (47). இவா், செய்யாறு அரசு மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்து வந்தாா்.

ஆறுமுகம் வியாழக்கிழமை காலை வழக்கம்போல பைக்கில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தாா். வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் மாமண்டூா் கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த சிப்காட் தனியாா் நிறுவன அவசர ஊா்தி பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், தூக்கி வீசப்பட்ட ஆறுமுகம், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.