செய்யாறு அருகே தனியாா் அவசர ஊா்தி மோதியதில் அரசு மருத்துவமனை ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
வந்தவாசி வட்டம், பொன்னூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (47). இவா், செய்யாறு அரசு மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்து வந்தாா்.
ஆறுமுகம் வியாழக்கிழமை காலை வழக்கம்போல பைக்கில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தாா். வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் மாமண்டூா் கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த சிப்காட் தனியாா் நிறுவன அவசர ஊா்தி பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், தூக்கி வீசப்பட்ட ஆறுமுகம், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தனியாா் நிறுவனத்தில் பணியிலிருந்த ஊழியா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழப்பு

பைக் மோதியதில் அரசு பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

தனியாா் பேருந்து மோதியதில் உணவு விநியோக ஊழியா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


