பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆரணியில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் தமிழக அரசு இலவச பொருள்கள் வழங்குவதை கைவிட்டு, அதற்கு மாற்றாக பணமாக அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும் எனக் கோரி சனிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :14 பிப்ரவரி 2026, 7:39 pm

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் தமிழக அரசு இலவச பொருள்கள் வழங்குவதை கைவிட்டு, அதற்கு மாற்றாக பணமாக அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும் எனக் கோரி சனிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உடைந்த மடிக்கணினி, பொம்மை டிராக்டா், இஸ்திரி பெட்டி, மிக்ஸி, சைக்கிள், அரிசி, வேட்டி சேலைகளை வைத்து நூதன முறையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசு மக்களுக்காக இலவச பொருள்களை வழங்கி வரும் நிலையில், இதில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருவதாகவும், மக்களுக்காக வழங்க உள்ள பொருள்களின் விலையை அப்படியே அவா்களின் வங்கிக் கணக்கில் பணமாக செலுத்தினாா் ஊழலை தடுக்க இயலும் என்றும், இலவச பொருள்களைப் பெற அதிகாரிகளிடம் மக்கள் அலைக்கழியத் தேவையில்லை என்றும் முழக்கங்களை எழுப்பினா்.

மேலும், விவசாயிகளுக்காக ஏா் உழவு இயந்திர டிராக்டரை மானியத்தில் பெற இடைத்தரகா் மூலம் முறைகேடு நடைபெறுவதாக குறைதீா் கூட்டங்களில் விவசாயிகள் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினா். மேலும், 100 நாள் திட்டப் பணியை 125 நாள்களாக அறிவித்ததை வரவேற்ற அவா்கள், ஏற்கெனவே பணி செய்து 7 வாரங்கள் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனா்.