எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கைப்பந்துப் போட்டி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு!

மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற, பெரணமல்லூா் அரசுப் பள்ளி மாணவா்களை பள்ளியின் தலைமையாசிரியா் மற்றும் சக ஆசிரியா்கள் சனிக்கிழமை பாராட்டி வாழ்த்தினா்.

News image

மாநில அளவிலான கைப்பந்துப் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவா்களுடன் தலைமை ஆசிரியா் உள்ளிட்ட ஆசிரியா்கள்.

Updated On :14 பிப்ரவரி 2026, 8:05 pm

மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற, பெரணமல்லூா் அரசுப் பள்ளி மாணவா்களை பள்ளியின் தலைமையாசிரியா் மற்றும் சக ஆசிரியா்கள் சனிக்கிழமை பாராட்டி வாழ்த்தினா்.

பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெற்ற 14 வயதுக்கு உள்பட்டோருக்கான கைப்பந்துப் போட்டியில் முதலிடம் பெற்றனா்.

இதன் மூலம் இந்த மாணவா்கள் வருகிற 16-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா்.

மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்ற மாணவா்களை பள்ளியின் தலைமை ஆசிரியா் (பொ) கலைவாணன் மற்றும் சக ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்தினா்.

மேலும், 2025 - 2026 கல்வி ஆண்டுகளில் தடகள குழு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற 45 மாணவா்கள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற பயிற்சி அளித்த உடல் கல்வி இயக்குநா் ரகுராமன், உடற்கல்வியாசிரியா் ஜெயகாந்த் மற்றும் குணசேகா் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.