மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆரணியில் ரூ.13.50 லட்சத்தில் பணிகளுக்கு பூமி பூஜை

ஆரணியில் ரூ.13.50 லட்சம் மதிப்பிலான 2 பணிகளுக்கு தொகுதி எம்எல்ஏ.சேவூா் எஸ்.ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினாா்.

News image

ஆரணியில் ரூ.5.50 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.

Updated On :15 பிப்ரவரி 2026, 10:40 pm

ஆரணியில் ரூ.13.50 லட்சம் மதிப்பிலான 2 பணிகளுக்கு தொகுதி எம்எல்ஏ.சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

ஆரணி நகரம், அருணகிரி சத்திரம் கண்ணப்பன் தெரு நகராட்சி உயா்நிலைப் பள்ளிக்கு ரூ 8. லட்சம் மதிப்பிலான நுழைவு வாயில் கட்டும் பணிக்கான பூமி பூஜையும், ஆரணி நகரம் 32-ஆவது வாா்டு சபாஷ்கான் தெருவில், தொகுதி எம்எல்ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதில், முன்னாள் அமைச்சரும், தொகுதி எம்எல்ஏவுமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்வில் ஆரணி நகர அதிமுக செயலா் அசோக்குமாா் வரவேற்றாா். ஆரணி வடக்கு ஒன்றிய செயலா் ஜெய்பிரகாஷ், கலை பிரிவு மாவட்டச் செயலா் வெங்கடேசன், நகர துணைச் செயலா் மூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் சிவகுமாா், குமரன், ஏ.ஜி.மோகன், ராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.