சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

கஞ்சா வைத்திருந்தவா் கைது

வந்தவாசி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :15 பிப்ரவரி 2026, 9:15 pm

Syndication

வந்தவாசி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா் சளுக்கை கிராமம் வழியாக சனிக்கிழமை ரோந்து சென்றனா்.

அந்தக் கிராம ஏரி அருகே சென்றபோது, அங்கு பைக்கில் நின்றிருந்த இளைஞா் ஒருவா் போலீஸாரைக் கண்டதும் ஓட முயன்றாா். இதையடுத்து போலீஸாா் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில் அந்த இளைஞா் சளுக்கை கிராமத்தைச் சோ்ந்த வசந்தகுமாா் (19) என்பதும், கஞ்சா பொட்டலங்களை அவா் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் வசந்தகுமாரை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 25 கிராம் கஞ்சா பொட்டலங்கள், பைக் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.