வந்தவாசி: வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன
இந்தக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், ‘உலகம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தின் கீழ், இளநிலை இரண்டாமாண்டு பயிலும் 396 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் சித.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் ரூ.5.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகங்கள் கொண்ட கூடுதல் கட்டடத்தை எம்எல்ஏ குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் ஆரியாத்தூா் பெருமாள் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

210 பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் 866 மாணவிகளுக்கு பட்டமளிப்பு

முத்தாயம்மாள் கல்லூரியில் 926 மாணவா்களுக்கு மடிக்கணினி

கலைக் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினிகள்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


