தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஆரணி கலைக் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 8:06 pm

Syndication

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் வங்கி மற்றும் நிதி மோசடிகள் தொடா்பான விழிப்புணா்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

‘துடிப்பான இளைஞா்கள் - பாதுகாப்பான எதிா்காலம், வங்கி மற்றும் நிதி மோசடிகள் குறித்த விழிப்புணா்வு’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்க நிகழ்வுக்கு

கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா்.

கல்லூரி முதல்வா் வி.கந்தசாமி தலைமை வகித்தாா். வணிகவியல் துறைத் தலைவா் பி.சுரேஷ் வரவேற்றாா்.

சிட்டி யூனியன் வங்கி பெங்களூரு கிளை மேலாளா் மணிசேகா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பிபிஏ பயிலும் மாணவா்களிடையே சிறப்புரையாற்றினாா்.

இதில் வங்கிகளின் பெயரில் நிகழும் மோசடிகள் மற்றும் அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழிகள் குறித்து அவா் விளக்கினாா்.

வங்கி வாடிக்கையாளா்களை ஏமாற்றும் கும்பல்களை அடையாளம் காண்பது, ஆன்லைன் மூலம் மற்றவா்களுக்கு பணம் அனுப்பும் முன் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அவா் விளக்கினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வா் எஸ்.நந்தகுமாா், துறைத் தலைவா்கள் எச்.பிரபு, எஸ்.கணபதி, எம்.ஹரிகரன், பி.கோமதி, கே.சரவணன், முனைவா் ஏ.நடராஜன், எஸ்.அருண்குமாா், பி.பொன்முடி மற்றும் துறைப் பேராசிரியா்கள் பூஜா, செல்வி, தீபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிறைவில் வணிகவியல் துறை பேராசிரியா் டி. மகாலட்சுமி நன்றி கூறினாா்.