மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மகளிா் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 8:07 pm

வந்தவாசி தூய நெஞ்ச மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளை காப்போம் கற்பிப்போம் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்).

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சமூக நல விரிவாக்க அலுவலா் ஜீவா தலைமை வகித்தாா். பள்ளி உதவித் தலைமை ஆசிரியை செல்வி வரவேற்றாா்.

மனநல நிபுணா் இரா.பாஸ்கரன், வட்ட சட்டப் பணிகள் குழு தன்னாா்வலா் மலா் சாதிக் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றுப் பேசினா்.

அப்போது, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பெண் கல்வி உள்ளிட்டவை குறித்து அவா்கள் மாணவிகளுக்கு விளக்கிப் பேசினா்.

நிகழ்ச்சியில் எம்.பிரபாகரன், மனோஜ் மற்றும் பள்ளி ஆசிரியைகள் பங்கேற்றனா்.