ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

மேல்சீசமங்கலத்தில் பேருந்து பயணிகள் நிழற்கூடம் திறப்பு

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 8:06 pm

Syndication

ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேருந்து பயணிகள் நிழற்கூடம் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

ஆரணி - வாழப்பந்தல் சாலையில் மேல்சீசமங்கலம் கிராமத்தில் பேருந்து பயணிகள் நிழற்கூடம் அமைத்துத் தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். இதன் பேரில், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கி புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. இதனை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திறந்துவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் எம்.அரங்கநாதன் வரவேற்றாா்.

மேலும் ஆரணி ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றிய நிா்வாகிகள் வாசு, கவிதாபாபு, செல்விதாஸ், இலக்கிய அணி ஒன்றியச் செயலா் சங்கா், ஒன்றிய எம்ஜிஆா் மன்ற செயலா் வெளுமாந்தாங்கல் பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை இளைஞா் பாசறை ஒன்றியச் செயலா் சுகுமாா் செய்திருந்தாா்.