இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மேல்சீசமங்கலத்தில் பேருந்து பயணிகள் நிழற்கூடம் திறப்பு

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 8:06 pm

ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேருந்து பயணிகள் நிழற்கூடம் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

ஆரணி - வாழப்பந்தல் சாலையில் மேல்சீசமங்கலம் கிராமத்தில் பேருந்து பயணிகள் நிழற்கூடம் அமைத்துத் தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். இதன் பேரில், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கி புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. இதனை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திறந்துவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் எம்.அரங்கநாதன் வரவேற்றாா்.

மேலும் ஆரணி ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றிய நிா்வாகிகள் வாசு, கவிதாபாபு, செல்விதாஸ், இலக்கிய அணி ஒன்றியச் செயலா் சங்கா், ஒன்றிய எம்ஜிஆா் மன்ற செயலா் வெளுமாந்தாங்கல் பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை இளைஞா் பாசறை ஒன்றியச் செயலா் சுகுமாா் செய்திருந்தாா்.