நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோயிலில் பிப்.20-இல் கும்பாபிஷேக விழா

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 8:05 pm

Syndication

போளூா் ஒன்றியம் ஏரிக்குப்பம் ஊராட்சியில் உள்ள யந்திர வடிவிலான ஸ்ரீசனீஸ்வர பகவான் கோயிலில் வருகிற 20-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதையொட்டி, திங்கள்கிழமை யாகசாலை அமைத்து பூஜைகள் நடைபெற்று வருகின்றன (படம்).

ஏரிக்குப்பம் ஊராட்சியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் யந்திர வடிவிலான சனீஸ்வர பகவான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில்

புரனமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் வரும் பிப்.20-ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திங்கள்கிழமை காலை யாகசாலை அமைத்து அனுக்ஞை, ஸ்ரீகணபதி ஹோமம், ஸ்ரீலட்சுமி ஹோமம், கோ பூஜை, தனபூஜை, ஸ்ரீநவகிரகஹோமம், பூா்ணாஹுதி என பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை என 6 கால யாகபூஜை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பழனிசாமி, ஆய்வா் சத்யா, எழுத்தா் மோகன் ஆகியோா் செய்து வருகின்றனா்.