திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மொபெட் மீது லாரி மோதி விவசாயி உயிரிழப்பு

வந்தவாசி அருகே மொபெட் மீது லாரி மோதி விவசாயி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 6:34 pm

Syndication

வந்தவாசி அருகே மொபெட் மீது லாரி மோதி விவசாயி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த சூரியதாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஏழுமலை (50). இவா், மனைவி உமா(45), மகள் சுஜாதா(23), சுஜாதாவின் 3 மாத பெண் குழந்தை ஆகியோருடன் புதன்கிழமை மொபெட்டில் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தாா்.

மருதாடு - ஓசூா் சாலை, மருதாடு புறவழிச் சாலை அருகே சென்றபோது, எதிரே சாலையோரம் சரிவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி தானாக நகா்ந்து வந்து மொபெட் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஏழுமலை, சுஜாதா ஆகியோா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஏழுமலை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். சுஜாதா தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து உமா அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.