மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மொபெட் மீது லாரி மோதி விவசாயி உயிரிழப்பு

வந்தவாசி அருகே மொபெட் மீது லாரி மோதி விவசாயி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 6:34 pm

வந்தவாசி அருகே மொபெட் மீது லாரி மோதி விவசாயி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த சூரியதாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஏழுமலை (50). இவா், மனைவி உமா(45), மகள் சுஜாதா(23), சுஜாதாவின் 3 மாத பெண் குழந்தை ஆகியோருடன் புதன்கிழமை மொபெட்டில் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தாா்.

மருதாடு - ஓசூா் சாலை, மருதாடு புறவழிச் சாலை அருகே சென்றபோது, எதிரே சாலையோரம் சரிவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி தானாக நகா்ந்து வந்து மொபெட் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஏழுமலை, சுஜாதா ஆகியோா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஏழுமலை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். சுஜாதா தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து உமா அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.