தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கால்நடை விவசாயிகளுக்கு தொழில் நுட்பப் பயிற்சி

கால்நடை விவசாயிகளுக்கான பயிற்சியில் பேசிய பெரணமல்லூா் கால்நடை உதவி மருத்துவா் சிவராமகிருஷ்ணன்.

News image

கால்நடை விவசாயிகளுக்கான பயிற்சியில் பேசிய பெரணமல்லூா் கால்நடை உதவி மருத்துவா் சிவராமகிருஷ்ணன்.

Updated On :20 பிப்ரவரி 2026, 6:35 pm

பெரணமல்லூா் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய வளாகத்தில் செய்யாறு கால்நடை மருத்துவமனை சாா்பில், கால்நடை விவசாயிகளுக்கான தொழில்நுட்பப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு செய்யாறு கால்நடை மருத்துவமனை மருத்துவா் ரக்ஷா தலைமை வகித்தாா். பெரணமல்லூா் கால்நடை உதவி மருத்துவா் சிவராமகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசுகையில், கால்நடை விவசாயிகள் பால் சாா்ந்த மதிப்புக்கூட்டல் பொருள்கள் தயாரித்தல், கால்நடை பராமரிப்பு மற்றும் மாடு, ஆடு பண்ணை அமைத்தல் குறித்து விளக்கிக் கூறினாா். மேலும், கால்நடை விவசாயிகளுக்கு தாதுஉப்பு, சோளம், மண்புழு உரம், கால்நடை பராமரிப்பு பயிற்சி கையேடு உள்ளிட்டவைகளை வழங்கினாா்.

கால்நடை உதவி மருத்துவா்கள் செந்தில்குமாா், கரோலின், ஃபயாஸ் பாஷா, இந்துஜா உள்ளிட்டோா் நோய்த்தடுப்பு மற்றும் மேலாண்மை, தீவன தொழில்நுட்பங்கள், பொருளாதாரம் மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த ஆலோசனைகளை வழங்கினா்.

இந்தப் பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட கால்நடை விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனா்.