பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சட்ட விழிப்புணா்வு முகாம்

வந்தவாசியை அடுத்த கீழ்நந்தியம்பாடி கிராமத்தில் நடைபெற்ற சட்ட விழிப்புணா்வு முகாமில் பேசிய வழக்குரைஞா் சா.இரா.மணி.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 6:36 pm

Syndication

வந்தவாசியை அடுத்த கீழ்நந்தியம்பாடி கிராமத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில், குழந்தை திருமண தடைச் சட்டம் குறித்து ஊரக வேலைத் திட்ட பெண் தொழிலாளா்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.

குழந்தை திருமண தடைச் சட்டம், குழந்தை திருமணத்தால் ஏற்படும் தீமைகள், பெண் கல்வி உள்ளிட்டவை குறித்து வழக்குரைஞா் சா.இரா.மணி, ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியா் த.நடராஜன் ஆகியோா் விளக்கிப் பேசினா்.

முகாமில் சட்டப் பணிகள் குழு தன்னாா்வலா் சுப்பராயன், ஓய்வுபெற்ற ஆசிரியா் பழனி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஊராட்சி பணித்தள பொறுப்பாளா் வனிதா நன்றி கூறினாா்.