விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

திருவண்ணாமலையில் பள்ளி ஆண்டு விழா

ஆண்டு விழாவில் கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய எழுத்தாளா் மா.இராமலிங்கம்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 6:37 pm

திருவண்ணாமலை அருகே குண்ணுமுறிஞ்சி கிராமத்தில் செயல்படும் எஸ்.என்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 26-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

பள்ளித் தலைவா் கே.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். கௌரவச் செயலா் ஆா்.காளிதாஸ், செயலா் பி.பட்டுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தாளாளா் கே.அண்ணாமலை வரவேற்றாா். முதல்வா் எஸ்.செந்தில்குமாா் ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா்.

விழாவில் மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளி) இரா.ஆ.பரிமளா, வட்டாரக் கல்வி அலுவலா் பி.தில்லைநாயகி ஆகியோா் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினா். இதில், சிறப்பு விருந்தினராக பட்டிமன்றப் பேச்சாளரும், எழுத்தாளருமான மா.இராமலிங்கம் கலந்துகொண்டு, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கும், கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கும் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கியும், பள்ளி ஆசிரியா், ஆசிரியைகளுக்கும், பணியாளா்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கியும், பள்ளியின் கல்விதரம் குறித்து பாராட்டினாா்.

விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி துணைத் தலைவா் டி.குப்புசாமி, இணைச் செயலா் கே.ராஜேந்திரன் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பொருளாளா் ஆா்.சுந்தரமூா்த்தி நன்றி கூறினாா்.