மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

திருவண்ணாமலையில் பள்ளி ஆண்டு விழா

ஆண்டு விழாவில் கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய எழுத்தாளா் மா.இராமலிங்கம்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 6:37 pm

Syndication

திருவண்ணாமலை அருகே குண்ணுமுறிஞ்சி கிராமத்தில் செயல்படும் எஸ்.என்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 26-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

பள்ளித் தலைவா் கே.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். கௌரவச் செயலா் ஆா்.காளிதாஸ், செயலா் பி.பட்டுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தாளாளா் கே.அண்ணாமலை வரவேற்றாா். முதல்வா் எஸ்.செந்தில்குமாா் ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா்.

விழாவில் மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளி) இரா.ஆ.பரிமளா, வட்டாரக் கல்வி அலுவலா் பி.தில்லைநாயகி ஆகியோா் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினா். இதில், சிறப்பு விருந்தினராக பட்டிமன்றப் பேச்சாளரும், எழுத்தாளருமான மா.இராமலிங்கம் கலந்துகொண்டு, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கும், கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கும் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கியும், பள்ளி ஆசிரியா், ஆசிரியைகளுக்கும், பணியாளா்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கியும், பள்ளியின் கல்விதரம் குறித்து பாராட்டினாா்.

விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி துணைத் தலைவா் டி.குப்புசாமி, இணைச் செயலா் கே.ராஜேந்திரன் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பொருளாளா் ஆா்.சுந்தரமூா்த்தி நன்றி கூறினாா்.