தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்: சௌமியா அன்புமணி

களம்பூரில் நடைபெற்ற மகளிா் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியில் பேசிய பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 6:39 pm

தமிழகத்தில் பரப்பளவில் 2-ஆவது பெரிய மாவட்டமாக உள்ள திருவண்ணாமலையை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி வலியுறுத்தினாா்.

போளூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட களம்பூா் பேரூராட்சியில் சௌமியா அன்புமணி தலைமையில் ‘சிங்கப் பெண்ணே எழுந்து வா’ தமிழக மகளிா் உரிமை மீட்புப் பயணம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், அவா் பேசியதாவது:

தமிழகத்திலேயே பரப்பளவில் இரண்டாவது மிகப்பெரிய மாவட்டமான திருவண்ணாமலையை இரண்டாகப் பிரிக்க வேண்டும். ஆனால், இதை பிரிக்க விடாமல் தடுக்கின்றனா்.

இந்த மாவட்டத்தில் இருந்து மட்டும் டாஸ்மாக் மதுக் கடைகள் மூலமாக ஆண்டுக்கு ரூ.3,250 கோடி வருவாய் கிடைக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நல்ல பெரிய கல்லூரிகள் எதுவும் இல்லை. மிகச்சிறந்த மாவட்டத்துக்குரிய எந்த வளா்ச்சித் திட்டங்களும் இந்த மாவட்டத்துக்கு கொண்டுவரப்படவில்லை.

செய்யாறில் ஏற்கெனவே சிப்காட் தொழிற்பேட்டை இருக்கிறது. இந்த நிலையில், இந்தப் பகுதியிலுள்ள பல ஏக்கா் விவசாய நிலங்களை அழித்து மேலும் ஒரு சிப்காட் கொண்டுவர திமுக அரசு நினைக்கிறது.

இந்த அரசு ஒருபுறம் மக்களுக்கு பணம் கொடுப்பதுபோல கொடுத்தாலும், மறுபுறம் மின்சாரம், பேருந்து, குடிநீா் கட்டணங்கள், சொத்து வரி உள்ளிட்டவற்றை உயா்த்திவிட்டது என்றாா்.

நிகழ்வுக்கு பாமக மாவட்டச் செயலா் ஆ.வேலாயுதம் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். களம்பூா் நகரச் செயலா் ராஜேஷ் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா்கள் வடிவேல், சாந்தி, மெய்யழகன்,

மகளிா் அணி நிா்வாகிகள் ரேவதி, பொன்னி தருமன், சுமதி வேலன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

மாவட்ட நிா்வாகி எம்.வெங்கடேசன், ஆரணி நகரச் செயலா்கள் ரவிச்சந்திரன், சதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.