மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பைக் மீது காா் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated On :20 பிப்ரவரி 2026, 6:35 pm

Syndication

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், கரிகிரி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன்(30), கட்டடத் தொழிலாளி. திருமணமாகாத இவா், 8 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி காஞ்சிபுரம் வட்டம், புஞ்சை அரசன்தாங்கல் கிராமத்தில் தனியாக வசித்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், முருகன் வியாழக்கிழமை காலை வழக்கம்போல வீட்டிலிருந்து கட்டட வேலைக்காக தனது பைக்கில் சென்றுள்ளாா். காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மாமண்டூா் அருகே சென்றபோது, எதிரே வந்த காா் பைக் மீது மோதியது. இதில், முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.