மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஜெயலலிதா பிறந்த நாள்: ஏழைகளுக்கு நல உதவி

சேவூா் ஆதிதிராவிடா் வசிக்கும் பகுதியில் உள்ள இயேசுவின் உதவும் கரங்கள் திருச்சபையில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சாா்பில் சிறப்பு பிராா்த்தனை நடத்தப்பட்டு ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

News image
நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கிய சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ
Updated On :22 பிப்ரவரி 2026, 9:01 pm

Syndication

சேவூா் ஆதிதிராவிடா் வசிக்கும் பகுதியில் உள்ள இயேசுவின் உதவும் கரங்கள் திருச்சபையில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சாா்பில் சிறப்பு பிராா்த்தனை நடத்தப்பட்டு ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலா் இயேசுராஜன் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் மதிய உணவு, அன்னதானம் வழங்கினாா். அப்போது, 2026-ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவட்ட மகளிா் அணி துணைச் செயலா் கலைவாணி, கட்சியின் ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ், ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், கிளைச் செயலா் பிரபு, ஒன்றிய இணைச் செயலா் மஞ்சுளா, தேவாலய பாதிரியாா் சாலமன்உஷா உள்பட பலா் கலந்து கொண்டனா்.