பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கிராம உதவியாளா்கள் மறியல்: 64 போ் கைது

வந்தவாசியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள் 64 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா்.

Updated On :23 பிப்ரவரி 2026, 9:17 pm

வந்தவாசி: வந்தவாசியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள் 64 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்க வந்தவாசி வட்டக் கிளைத் தலைவா் ஆா்.தமிழ்மாறன், வட்டச் செயலா் வி.பாரதி, மாவட்ட துணைத் தலைவா் எம்.அருள்ஜோதி உள்ளிட்டோா் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனா்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 64 பேரை வந்தவாசி தெற்கு போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.