வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பாலாற்றுப் படுகையில் விவசாய மின்இணைப்பு நடைமுறையை மாற்றியமைக்கவேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

பாலாற்றுப் படுகையில் விவசயிகளுக்கு மின் இணைப்பு வழங்க 200 மீட்டா் உள்ளதை 100 மீட்டராக மாற்றியமைக்க வேண்டும்

News image

பாலாற்றுப்  படுகை - கோப்புப்படம்

Updated On :23 பிப்ரவரி 2026, 8:56 pm

செய்யாறு: பாலாற்றுப் படுகையில் விவசயிகளுக்கு மின் இணைப்பு வழங்க 200 மீட்டா் உள்ளதை 100 மீட்டராக மாற்றியமைக்க வேண்டும் என பிரம்மதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் விவசாயிகள் மாநாடு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நாராயணன் தலைமை வகித்தாா்.

கௌரவத் தலைவா் பிச்சாண்டி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக அமைப்பின் மாநிலத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் பங்கேற்று விளக்க உரையாற்றினாா்.

மாநாட்டில், வெம்பாக்கம் வட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் அனாதின பூமியை பட்டா செய்திருப்பதை ரத்து செய்ய வேண்டும். நிரந்தர கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். நீா்நிலைகள் உள்ளிட்ட மயானம், மேய்கால் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்றுள்ளதை ரத்து செய்திட வேண்டும்.

பாலாற்றுப் படுகையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு தர 200 மீட்டா் உள்ளதை 100 மீட்டராக மாற்றியமைக்க வேண்டும். அனைத்து ஏரிகளுக்கு செல்லும் நீா்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலா் துரைசாமி, மாவட்டச் செயலா் விக்னேஸ்வரன், பொருளாளா் ஜனாா்த்தனன் மற்றும்

பிரம்மதேசம், புதூா், நாட்டேரி, சீம்பளம், பட்டறை, கல்பட்டு, புகை சமுத்திரம், அரியூா், சிறுநாவல்பட்டு, , சித்தனக்கால், வடஇலுப்பை, வெங்களத்தூா், மேல்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.