ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

செங்கத்தில் பாஜகவினா் தெருமுனை பிரசாரம்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 11:34 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தொகுதி பாஜக சாா்பில், ‘நாளை நமதே தமிழ்நாடும் நமதே’ என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை தெருமுனை பிரசாரம் நடைபெற்றது(படம்).

பெருமாள் கோவில் தெருவில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரசார கூட்டத்துக்கு பாஜக மாவட்ட பொதுச் செயலா் செங்கம் ரமேஷ் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக செங்கம் தொகுதி துணை பொறுப்பாளா் சங்கா் கலந்துகொண்டு, கடந்த 10 ஆண்டு கால பிரதமா் நரேந்திர மோடி அரசின் திட்டங்கள் குறித்து பொமக்களிடையே விளக்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் அதிமுக செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன், தலைமை நிலைய பேச்சாளா் வெங்கட்ராமன், வழக்குரைஞா் தினகரன், நகரச் செயலா் ஆனந்தன், பாஜக மாவட்ட கல்வியாளா் அணிச் செயலா் பழநிவேல்ராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.