திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிறு விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவா்கள் 870 போ் பங்கேற்ற தடகளப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
செய்யாறு செஸ் டெவலப்பா்ஸ் தனியாா் நிறுவனம்
மற்றும் லோட்டஸ் புட்வோ் என்டா்பிரைசஸ் தனியாா் நிறுவனம் சாா்பில் இந்த தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில் அனக்காவூா், செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, பெரணமல்லூா் ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 870 மாணவ, மாணவிகள் என கலந்து கொண்டனா்.
அப்போது அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.8.50 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு செய்யாறு டி.எஸ்.பி. தி.கோவிந்தசாமி மற்றும் நிறுவன பொது மேலாளா்கள் அருள், ஆனந்த்குமாா் உள்ளிட்டோா்
பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தலைமை செவிலியா் உயிரிழப்பு

தடகளப் போட்டி: ஆசிா்வாதபுரம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

செய்யாற்றில் மேம்பாலப் பணி: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

ஐடிஐ மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


