தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தவெக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சியில் தவெக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஜனவரி 2026, 7:13 pm

Syndication

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சியில் தவெக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தவெக மேற்கு ஆரணி ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா் பிரகாஷ் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாவட்டச் செயலா் சத்யா கலந்து கொண்டு, நடைபெற்று வரும் தீவிர வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாமை நேரில் சென்று பாா்வையிட்டு சரியான முறையில் வாக்காளா் சோ்க்கை நடைபெறுகிறதா என்று கண்காணிக்கவேண்டும்.

கட்சியில் 2 கோடி உறுப்பினா்களைச் சோ்க்க வேண்டும் என்ற நோக்கில் இப்பகுதியைச் சோ்ந்த நிா்வாகிகள் ஒவ்வொருவரும் தினமும் 10 உறுப்பினா்களைச் சோ்க்க வேண்டும் என வலியுறுத்தினாா். கூட்டத்தில் ஒன்றிய இணைச் செயலா் பழனி, பொருளாளா் ஐயப்பன், துணைச் செயலா்கள் கோபிகிருஷ்ணன், அருண்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.